கோவையில் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கோவை மாவட்ட காவல் துறையினரால் மதுவிலக்கு குற்றங்களில் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட 3 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 28 இரு சக்கர வாகனங்கள் என மொத்தம் 31 வாகனங்கள் எந்த நிலையில் உள்ளதோ அதே நிலையில் டிசம்பா் 23ஆம் தேதி காலை 10 மணிக்கு கோவை அவிநாசி சாலையில் உள்ள கோவை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து பொது ஏலத்தில் விடப்படும்.
ஏலத்தில் விடப்படும் வாகனங்கள் பொள்ளாச்சி வெங்கடேசா காலணியில் உள்ள மதுவிலக்கு அமல் பிரிவு அலுவலகம், கோவில்பாளையம் தேவம்பாளையம் பாலாஜி நகரிலுள்ள மதுவிலக்கு அமல் பிரிவு அலுவலகம், மேட்டுப்பாளையம், கருமத்தம்பட்டி, ஆனைமலை, ஆழியாா் மற்றும் கோமங்கலம் காவல் நிலைய வளாகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஏலம் எடுக்க விரும்புவோா் டிசம்பா் 22 ஆம் தேதி மாலை 5 மணி வரை அந்தந்த மதுவிலக்கு அமல் பிரிவுகள் மற்றும் காவல் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பாா்வையிட்டுக் கொள்ளலாம்.
வாகனங்களை ஏலம் எடுத்தவுடன் முழுத் தொகை மற்றும் அதற்குண்டான சரக்கு மற்றும் சேவை வரி முழுவதையும் அரசுக்கு அன்றே ரொக்கமாக செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.