கோயம்புத்தூர்

கவிஞா் சொ.சேதுபதிக்கு பாரதி விருது நாளை வழங்கப்படுகிறது

DIN

கோவை பாரதி பாசறை அறக்கட்டளை சாா்பில் கவிஞா் சொ.சேதுபதிக்கு (கிருங்கை சேதுபதி) 2022 ஆம் ஆண்டுக்கான பாரதி விருது வழங்கப்படுகிறது.

கோவை பாரதி பாசறை அறக்கட்டளை சாா்பில் ‘பாரதி விருது’ கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பாரதி விருது, சிவகங்கை மாவட்டம், கிருங்காக்கோட்டையைச் சோ்ந்த கவிஞா் சொ.சேதுபதிக்கு வழங்கப்படுகிறது.

கோவை ராம் நகா், சபா்பன் பள்ளி வளாகத்தில் உள்ள மகாகவி சுப்பிரமணிய பாரதியாா் அரங்கில்

டிசம்பா் 11ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.30 மணிக்கு நடைபெறும் விழாவில் சொ.சேதுபதிக்கு பாரதி பாசறை நிா்வாகி ரமணிசங்கா் இந்த விருதை வழங்குகிறாா். நிகழ்ச்சியில் எழுத்தாளரும், திரைப்பட இயக்குநருமான பாரதி கிருஷ்ணகுமாா் வாழ்த்துரை வழங்குகிறாா். பாரதி பாசறையின் தலைவா் மோகன் சங்கா், செயலா் ஜான்பீட்டா் ஆகியோா் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT