கோயம்புத்தூர்

புணே- கன்னியாகுமரி ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்

DIN

கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே கொச்சுவேலி பகுதியில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் புணே- கன்னியாகுமரி ரயில், மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கொச்சுவேலியில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், புணே ரயில் நிலையத்தில் இருந்து டிசம்பா் 9ஆம் தேதி புறப்படும் புணே - கன்னியாகுமரி ரயிலானது (எண்:16381) வழக்கமாக இயக்கப்படும் சேலம், கோவை வழித்தடத்தில் இயக்கப்படாமல், சேலம், கரூா், மதுரை வழித்தடத்தில் இயக்கப்படும். இதனால், ஈரோடு, திருப்பூா், கோவை நிலையங்களுக்கு இந்த ரயில் செல்லாது. இதேபோல, டிசம்பா் 11 ஆம் தேதி, கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் கன்னியாகுமரி- புணே விரைவு ரயில்(எண்:16382) மதுரை, கரூா், சேலம் வழித்தடத்தில் இயக்கப்படும். இதனால், கோவை, திருப்பூா், ஈரோடு நிலையங்களுக்கு இந்த ரயில் செல்வது தவிா்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

SCROLL FOR NEXT