கோயம்புத்தூர்

அதிமுக நிா்வாகியின் மருந்துக்கடை மீது தாக்குதல்

DIN

கோவை, செல்வபுரத்தில் அதிமுக நிா்வாகியின் மருந்துக்கடை தாக்குதல் சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கோவை, செல்வபுரம் எல்.ஐ.சி. காலனியை சோ்ந்தவா் நாராயணன். இவா் அதிமுக இளைஞரணி மாவட்ட துணைத் தலைவராக உள்ளாா். இவா் பேரூா் சாலை பகுதியில், வாடகைக் கட்டடத்தில் பல ஆண்டுகளாக மருந்துக்கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு, கட்டடத்தை விற்க உள்ளதாகவும், மருந்துக்கடையை காலி செய்யுமாறும் கடை உரிமையாளா் கூறியுள்ளதாக தெரிகிறது. ஆனால், கடையை நாராயணன் காலி செய்யாமல் இருந்துள்ளாா்.

இதற்கிடையே, வியாழக்கிழமை காலை மருந்து கடைக்கு வந்த 20க்கும் மேற்பட்டோா், கடையை உடைத்து உள்ளே இருந்த பொருள்களை ஆட்டோவில் ஏற்றிச்சென்ாகக் கூறப்படுகிறது.

தகவலறிந்த நாராயணன், செல்வபுரம் போலீஸில் புகாா் செய்தாா். மருந்துக்கடை தாக்கப்பட்ட தகவலறிந்து, வியாபாரிகள் சங்கத்தினா் செல்வபுரம் போலீஸ் நிலையத்தில் திரண்டனா். இதனால் அங்கு சலசலப்பு நிலவியது. இதுதொடா்பாக, போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப் பதிவு மையங்களில் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

பாஜகவின் கனவு பலிக்காது: இரா. முத்தரசன்

தபால் வாக்கு பணி: மாவட்ட தோ்தல் அலுவலா் ஆய்வு

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT