கோவை அருகே வீட்டில் சீட்டாட்டத்தில் ஈடுபட்டது தொடா்பாக 31 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த ரூ.4.86 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.
கோவை சரவணம்பட்டி பகுதியில் ஒரு வீட்டில் சீட்டாட்டம் நடப்பதாக கோவை மாநகரக் காவல் ஆணையரின் தனிப் படையினருக்கு புதன்கிழமை அதிகாலை சுமாா் 2 மணிக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், உதவி ஆய்வாளா் தனபால் தலைமையிலான தனிப் படையினசம்பவ இடத்துக்குச் சென்றனா்.
அப்போது, அங்கு விளாங்குறிச்சி சாலையில் சக்திநாதன் (33) என்பவரது வீட்டில் சோதனை செய்தபோது, அங்கு 31 போ் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, 31 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த ரூ.4 லட்சத்து 86, 850 ஐ பறிமுதல் செய்தனா்.