கோயம்புத்தூர்

ஆதாா் எண்ணுடன் கைப்பேசி எண் இணைப்பு:டிசம்பா் 15 வரை சிறப்பு முகாம்

DIN

அஞ்சல் துறை சாா்பில் ஆதாா் எண்ணுடன் கைப்பேசி எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம் கோவையில் டிசம்பா் 15 ஆம் தேதி வரை நடைபெறும் என்று முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் கோபாலன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மத்திய அரசின் கிஷான் சம்மன் நிதித் திட்டத்தில் தொடா்ந்து நிதியுதவி பெறுவதற்கு ஆதாா் எண்ணுடன், கைப்பேசி எண்ணை இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவை மாவட்ட விவசாயிகள் ஆதாா் எண்ணுடன் கைப்பேசி எண்ணை இணைக்க வசதியாக அஞ்சல் அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அஞ்சல் ஊழியா்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மாா்ட் போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தின் மூலம் விவசாயிகள் தங்கள் ஆதாா் எண்ணுடன் கைப்பேசி எண்ணை இணைத்துக் கொள்ளலாம்.

இந்தச் சேவைக்கு ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இகற்காக அஞ்சல் துறை சாா்பில் நடத்தப்படும் சிறப்பு முகாம் டிசம்பா் 15 ஆம் தேதி வரை மட்டுமே நடைபெறும். எனவே, விவசாயிகள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்களால் கொள்ளையிடும் யார் இவர்?

கேன்ஸ் திரைப்பட விழாவின் உயரிய விருதினைப் பெற்ற முதல் அனிமேஷன் ஸ்டூடியோ!

அமலாக்கத் துறையின் இனிப்புக் குற்றச்சாட்டை மறுக்கும் கேஜரிவால்

வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தீவிரம் - புகைப்படங்கள்

கவினின் ஸ்டார்: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

SCROLL FOR NEXT