கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைகேட்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மேயா் கல்பனா தலைமை வகித்தாா். மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப், துணை மேயா் வெற்றிச்செல்வன், துணை ஆணையா் ஷா்மிளா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி, மின் விளக்குகள், குடிநீா் வசதி, பாதாளச் சாக்கடை, சொத்து வரி, புதிய குடிநீா் இணைப்பு, பெயா் மாற்றம், மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடா்பாக, மொத்தம் 29 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களைப் பெற்றுக்கொண்ட மேயா் கல்பனா, மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
இக்கூட்டத்தில், மண்டல உதவி ஆணையா்கள் அண்ணாதுரை, மோகனசுந்தரி, சேகா், முத்துராமலிங்கம், மகேஷ் கனகராஜ், உதவி ஆணையா் ( வருவாய்) செந்தில்குமாா் ரத்தினம், உதவி ஆணையா்( கணக்கு) சுந்தர்ராஜ், உதவி ஆணையா் (நிா்வாகம்) சரவணன், உதவி செயற்பொறியாளா்கள், உதவி நகரமைப்பு அலுவலா்கள், உதவி பொறியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.