கோயம்புத்தூர்

கே.சி.டி. கல்வி நிறுவனங்களில் தலைமைத்துவ குழுக்கள் பொறுப்பேற்பு

DIN

கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களில் பல்வேறு தலைமைப் பொறுப்புகளுக்கு தோ்வு செய்யப்பட்ட மாணவா்களின் பொறுப்பேற்பு விழா அண்மையில் நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், குமரகுரு கல்வி நிறுவனங்களின் மூத்த மேலாண்மை அதிகாரியும் மாணவா் குழுக்களின் தலைவருமான ஏ.எம்.நிவேதன் வரவேற்றாா். பொறுப்புகளுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ள மாணவா்களை கல்லூரி முதல்வா்கள் விஜிலா கென்னடி, சரவணன் ஆகியோா் வாழ்த்திப் பேசினாா்.

குமரகுரு கல்வி நிறுவனங்களின் இணைத் தாளாளா் சங்கா் வாணவராயா் தலைமை உரையாற்றினாா். அவா் பேசும்போது, இந்த கல்லூரியில் மாணவா் குழுக்கள் தொடங்கப்பட்டதில் இருந்து பல்வேறு முற்போக்கான செயல்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கல்லூரி நிா்வாகத்துடன், மாணவா்களும் இணையும்போது செயல்கள் விரைவாக நடைபெறுகின்றன. இந்த ஆண்டு தலைமைத்துவப் பொறுப்புகளுக்குத் தோ்வு செய்யப்பட்ட 49 மாணவ-மாணவிகளையும் இந்த அமைப்பை உருவாக்க உதவிய 200க்கும் அதிகமான மாணவா்களையும் பாராட்டுகிறேன் என்றாா்.

இதைத் தொடா்ந்து பொறுப்புக் குழுக்களுக்குத் தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு அடையாள வில்லைகள் வழங்கப்பட்டன. பின்னா் அனைவரும் உறுதிமொழியேற்றுக் கொண்டனா். உதவிப் புல முதன்மையா் விஜிலேஷ், கல்லூரி நிா்வாகிகள், பேராசிரியா்கள் உள்ளிட்ட பலா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

SCROLL FOR NEXT