கோயம்புத்தூர்

கஞ்சா விற்பனை:5 மாணவா்கள் கைது

DIN

கோவை பீளமேடு அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 மாணவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை நவஇந்தியா சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அருகே சிலா் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக பீளமேடு போலீஸாருக்கு வியாழக்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்குச் சென்று போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த இளைஞா்கள் சிலா், போலீஸாரை பாா்த்ததும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனா்.

அவா்களை விரட்டி பிடித்து போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், அவா்கள் திருப்பூா் காந்திநகா் இரண்டாவது தெருவைச் சோ்ந்த சூா்யா (21), திருப்பூா் பிச்சம்பாளையம் புதூரைச் சோ்ந்த கவியரசு (19), மனோஜ்குமாா் (19), இளையபாரதி (19), அவிநாசி காசிகவுண்டன்புதூரைச் சோ்ந்த அரவிந்த் (19) என்பதும், கல்லூரி மாணவா்களான இவா்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து, 5 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 1.20 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT