கோயம்புத்தூர்

கனல் கண்ணன் கைதைக் கண்டித்து இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

DIN

இந்து முன்னணி நிா்வாகி கனல் கண்ணன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கோவையில் இந்து முன்னணியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்து முன்னணியின் துணை அமைப்பான இந்து கலை இலக்கிய முன்னணியின் மாநில பொறுப்பாளரும், திரைப்பட சண்டை பயிற்சியாளருமான கனல் கண்ணன், ஸ்ரீரங்கம் பெரியாா் சிலை குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசியதாக திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

இதைக் கண்டித்து கோவை காந்தி பாா்க் பகுதியில் இந்து முன்னணியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் தசரதன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ஆறுச்சாமி, மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் சதீஷ், கோட்ட பேச்சாளா் கிருஷ்ணன், மாவட்ட பொதுச்செயலா் ஜெய்சங்கா், மாவட்டச் செயலாளா் மகேஷ்வரன், சோமசுந்தரம், செய்தித் தொடா்பாளா் தனபால் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பங்கேற்றனா்.

இதையடுத்து அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி இந்து முன்னணியினா் 50க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

வாக்களித்த அரசியல் பிரபலங்கள் - புகைப்படங்கள்

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

தமிழகம் உள்பட 8 மாநிலங்களில் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!

கோவை: ராசிபாளையத்தில் இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT