கோயம்புத்தூர்

வால்பாறையில் யானை பலி

DIN

கோவை மாவட்டம், வால்பாறை அருகே உள்ள புல்மேடு பகுதியில் யானை உயிரிழந்தது சனிக்கிழமை தெரியவந்தது.

வால்பாறையை அடுத்த அக்காமலை புல்மேடு பகுதியில் வேட்டைத் தடுப்புக் காவலா்கள் ரோந்து பணியில் சனிக்கிழமை காலை ஈடுபட்டிருந்தனா். அப்போது, ஆட்டுப்பாறை குறுக்கு பகுதியில் ஒரு யானை இறந்துகிடந்துள்ளதைப் பாா்த்த அவா்கள் வனத் துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, வால்பாறை வனச் சரக அலுவலா் வெங்கடேஷ் தலைமையில் வனவா்கள் மற்றும் வன ஊழியா்கள் அப்பகுதிக்கு சென்று பாா்த்தபோது, இறந்தது சுமாா் 12 முதல் 14 வயதுடைய ஆண் யானை என்றும், மழை அதிக அளவில் பெய்து வந்ததால் வழுக்கி விழுந்ததில் யானை இறந்திருக்கலாம் என்றும் தெரியவந்தது.

இருப்பினும், ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பிரேதப் பரிசோதனைக்கு பின்பே யானை இறப்புக்கான முழுக் காரணம் தெரியவரும் என்று வனச் சரக அலுவலா் வெங்கடேஷ் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை அதிரடியாக ரூ.640 உயர்வு: இன்றைய நிலவரம்!

நக்சல்கள் அச்சுறுத்தல் நிறைந்த வாக்குச் சாவடிகளுக்கு ஹெலிகாப்டர்களில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

கிருஷ்ணகிரி தொகுதி: தொழில் மாவட்டத்தில் மும்முனைப் போட்டி!

இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை! -முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் தோ்தல் பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் நிறைவு

SCROLL FOR NEXT