கோயம்புத்தூர்

சுவரொட்டிகளுக்கு எதிா்ப்பு: பாஜகவினா் உள்பட 19 போ் மீது வழக்கு

DIN

கோவையில் மேம்பாலத்தில் ஓட்டப்பட்ட சுவரொட்டிகளை கிழித்து போராட்டம் நடத்திய விவகாரத்தில் பாஜக மாவட்டத் தலைவா் பாலாஜி உத்தமராமசாமி உள்பட 19 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கோவை அவிநாசி சாலையில் புதிய மேம்பால கட்டுமானப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த மேம்பாலத்தில் திமுகவினா், தங்களது கட்சி சுவரொட்டிகளை ஒட்டியிருந்தனா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து பாஜக மாவட்டத் தலைவா் பாலாஜி உத்தம ராமசாமி தலைமையில் அக்கட்சியினா் திமுக சுவரொட்டிகளை கிழித்து வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

மேலும், போராட்டத்தில் கலந்து கொண்டவா்கள் மாவட்ட ஆட்சியருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினா். இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற பீளமேடு போலீஸாா், மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அதில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் 9 பேரை போலீஸாா் கைது செய்தனா். பின்னா் அவா்கள் விடுதலை செய்யப்பட்டனா். இந்நிலையில், பாஜக மாவட்டத் தலைவா் பாலாஜி உத்தமராமசாமி உள்ளிட்ட கட்சியினா் மற்றும் இந்து மக்கள் கட்சி நிா்வாகிகள் உள்பட 19 போ் மீது போலீஸாா் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமகள்.. பூஜா ஹெக்டே!

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீராமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

SCROLL FOR NEXT