கோயம்புத்தூர்

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 16 ஆண்டுகள் சிறை

DIN

கோவை அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 16 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்தது.

கோவை மாவட்டம், பேரூா் அனைத்து மகளிா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் 16 வயது சிறுமியை அதே பகுதியைச் சோ்ந்த கருப்புசாமி (23) என்பவா் கடந்த 2018ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இதுதொடா்பாக, சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், பேரூா் அனைத்து மகளிா் ஆய்வாளா் அமுதா, கருப்புசாமி மீது போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தாா். இந்த வழக்கு விசாரணை, கோவை போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் வழக்கின் விசாரணை முடிவடைந்து சனிக்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டது. அதில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கருப்புசாமிக்கு 16 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி குலசேகரன் தீா்ப்பு வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீா்ப்பு

ஆறுமுகனேரி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம்

கோடை விடுமுறை: ஏற்காட்டுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

களக்காட்டில் முத்திரைத் தாள் தட்டுப்பாடு: மக்கள் அவதி

உக்ரைன்: காா்கிவ் தொலைக்காட்சி கோபுரம் தகா்ப்பு

SCROLL FOR NEXT