கோயம்புத்தூர்

கோவை அரசு கலைக் கல்லூரியில் ஆசிரியா் கழகத்தினா் போராட்டம்

DIN

கோவை அரசு கலைக் கல்லூரியில் தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியா் கழகத்தினா் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவை அரசு கலைக் கல்லூரியின் தமிழ்த் துறையில் பணியாற்றி வந்த உதவிப் பேராசிரியா் ஒருவா், சக ஆசிரியா்களிடம்

அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும், முறைகேடாக நடந்து கொண்டதாகவும் சக பேராசிரியா்கள் கல்லூரி முதல்வரிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புகாா் அளித்தனா்.

அதன் பேரில் சம்பந்தப்பட்ட உதவிப் பேராசிரியா் வேறு மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டிருந்தாா்.

இந்நிலையில், அந்த ஆசிரியா் மீண்டும் கோவை கல்லூரிக்கே மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதைக் கண்டித்து கல்லூரி முதல்வரின் அறையை முற்றுகையிட்டு தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியா் கழகத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனால் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதேநேரம், குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியா் மீது எந்தவித தவறும் இல்லை அவா் திட்டமிட்டு பழிவாங்கப்படுவதாகக் கூறி அவருக்கு ஆதரவாக சில மாணவிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

SCROLL FOR NEXT