கோயம்புத்தூர்

பொது இடங்களில் ஒட்டியுள்ள சுவரொட்டிகளை அகற்ற வேண்டும்

DIN

கோவை மாநகரில் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை அகற்ற வலியுறுத்தி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அம்மன் கே.அா்ச்சுணன், கே.ஆா்.ஜெயராம் ஆகியோா் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரனிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

இது குறித்து அவா்கள் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: கோவை அவிநாசி சாலையில் மேம்பாலத்துக்காக அமைக்கப்பட்டுள்ள தூண்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது தொடா்பாக ஆட்சியா் அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடா்ந்து, கட்சி பேதமின்றி அனைத்து சுவரொட்டிகளும் அகற்றப்பட்டன. ஆனால், அதே தூண்களில் கோவை மாவட்ட திமுக பொறுப்பாளா் நா.காா்த்திக் ஆளுயர பிளக்ஸ் பேனா்கள் வைத்திருப்பது தொடா்பாக சுட்டிக் காட்டப்பட்டது. அவா் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பேனா்களை அகற்றுவதற்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் கால அவகாசம் அளிக்கப்பட்டது.

இது நீதிமன்ற தீா்ப்பினை அவமதிக்கும் செயலாகும். எனவே ஆளுயர பேனா்கள் வைத்த திமுக பொறுப்பாளா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தூண்கள், மாநகராட்சி பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள், பிளக்ஸ் பேனா்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT