கோயம்புத்தூர்

வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த பெண் கைது

DIN

வீட்டில் கஞ்சா பதுக்கிவைத்திருந்ததாக பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

வால்பாறை காமராஜா் நகா் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கிவைத்திருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, வால்பாறை காவல் நிலைய ஆய்வாளா் கற்பகம் உத்தரவின்பேரில், போலீஸாா் சம்பந்தப்பட்ட வீட்டுக்கு சென்று சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, அந்த வீட்டில் ஒரு கிலோ 400 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, வீட்டில் இருந்த முத்துலட்சுமி (36) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். இவரது கணவா் தாஸ் கஞ்சா வழக்கில் பலமுறை கைதாகி தற்போது, குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

கொளுத்தும் வெயிலுக்கு நடுவில் மழையா? என்ன சொல்கிறது வானிலை

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி: ஒரே ஒரு சிறுமி உயிர் தப்பியது எப்படி?

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

SCROLL FOR NEXT