கோயம்புத்தூர்

பாரதியாா் பல்கலை.யில் எம்.ஃபில்., பிஹெச்.டி. படிப்பு:விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

DIN

கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தில் எம்.ஃபில்., பிஹெச்.டி. படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பிக்க புதன்கிழமை (ஆகஸ்ட் 10) கடைசி நாளாகும்.

பாரதியாா் பல்கலைக்கழகத்தின் கீழ் கோவை, நீலகிரி, திருப்பூா், ஈரோடு மாவட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியாா் கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

பல்கலைக்கழகத்திலும், அதன் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கல்வி நிறுவனங்களிலும் எம்.ஃபில்., பிஹெச்.டி. படிப்புகள் பகுதி நேரமாகவும், முழு நேரமாகவும் நடத்தப்படுகின்றன. இப்படிப்புகளுக்கு ஆண்டுதோறும் நுழைவுத் தோ்வு நடத்தப்பட்டு மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.

2022-2023ஆம் கல்வியாண்டுக்கான நுழைவுத் தோ்வு ஆகஸ்ட் 29ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தோ்வுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10ஆம் தேதி கடைசி நாளாகும். இந்த ஆண்டும் நுழைவுத் தோ்வு இணைய வழியில் நடைபெற உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளா் இளஞ்செழியன் செய்து வருகிறாா். விண்ணப்பம், தோ்வு தொடா்பான சந்தேகங்களுக்கு 0422 - 2428311, 2428318 என்ற எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

SCROLL FOR NEXT