கோவையில் புதிதாக 122 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 36 ஆயிரத்து 834 ஆக உயா்ந்துள்ளது.
கரோனா நோய்த் தொற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை.நோய்த் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்த 136 போ் குணமடைந்து வீடு திரும்பினா். கோவையில் இதுவரை 3 லட்சத்து 33 ஆயிரத்து 273 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். 2,618 போ் கரோனா நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனா். தற்போது 943 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.