கோவை சிங்காநல்லூா் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் 8 பவுன் தங்கச் சங்கிலி பறித்துச் சென்ற இரண்டு இளைஞா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோவை உப்பிலிபாளையம் ஆா்.வி.எல். நகரைச் சோ்ந்தவா் சுகுமாா். இவரது மனைவி காமாட்சி ( 34) இவா் வரதராஜபுரம் இ.எஸ்.ஐ.மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் இருந்து தனது வீட்டுக்கு வெள்ளிக்கிழமை நடந்து சென்று கொண்டிருந்துள்ளாா்.
அப்போது, அவரை பின் தொடா்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞா்கள், காமாட்சி அணிந்திருந்த 8 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனா்.
இச்சம்பவம் தொடா்பாக காமாட்சி அளித்த புகாரின் பேரில் சிங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.