கோயம்புத்தூர்

கோவையில் இன்று மெகா தடுப்பூசி முகாம்:1,530 இடங்களில் நடைபெறுகிறது

DIN

கோவை மாவட்டத்தில் 33 ஆவது மெகா தடுப்பூசி முகாம் 1,530 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது என்று மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகம் முழுவதும் 33 ஆவது மெகா கரோனா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் 1,081 மையங்கள், மாநகராட்சியில் 340 மையங்கள், நகராட்சிகளில் 109 மையங்கள் என மொத்தம் 1,530 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

முதல் தவணை, இரண்டாம் தவணை மற்றும் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவா்கள் சிறப்பு முகாமில் பங்கேற்று தடுப்பூசி செலுத்திகொண்டு நோய்த் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் வெண்ணைத்தாழி விழா!

நாட்டரசன்கோட்டையில் பெருமாள் ஆற்றில் இறங்கும் நிகழ்வு!

மறுவெளியீட்டிலும் பிளாக்பஸ்டர்!

கும்பகோணத்தில் சாரங்கபாணி கோயில் தேரோட்டம்

மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில் தேரோட்டம்

SCROLL FOR NEXT