கோவையில் 3 ஆவது வாரமாக நடைபெற்ற மெகா கரோனா தடுப்பூசி முகாமில் 1.13 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
கோவை மாவட்டத்தில் 3 ஆவது வாரமாக மெகா கரோனா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இம்முகாமில் 1 லட்சத்து 4 ஆயிரத்து 369 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியும், 9 ஆயிரத்து 249 பேருக்கு கோவேக்ஸின் தடுப்பூசியும் என மொத்தம் 1 லட்சத்து 13 ஆயிரத்து 618 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
ஏற்கெனவே முதல் வாரம் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் 1.51 லட்சம் பேருக்கும், இரண்டாவது வாரத்தில் 94 ஆயிரம் பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பெ.நா.பாளையம், அன்னூா், காரமடை, பொள்ளாச்சி வடக்கு மற்றும் மாநகராட்சியில் ஒரு சில வாா்டுகளில் இரவு 7 மணி முதல் 8 மணி வரை வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை இரவு வரை நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம் காரணமாக திங்கள்கிழமை கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.