கோவையில் தந்தை பெரியாா் திராவிடா் கழகம் சாா்பில் நடைபெற்ற ரத்த தான முகாமை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் துவக்கிவைத்தாா்.
ஈ.வெ.ரா.வின் 143 ஆவது பிறந்தநாளையொட்டி த.பெ.தி.க. சாா்பில் காந்திபுரம் தந்தை பெரியாா் படிப்பகத்தில் ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இம்முகாமுக்கு, த.பெ.தி.க. பொதுச் செயலாளா் கு.ராமகிருட்டிணன் தலைமை வகித்தாா்.
முன்னாள் அமைச்சா் பொங்கலூா் நா.பழனிசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. நா.காா்த்திக் முன்னிலை வகித்தனா். ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என். கயல்விழி செல்வராஜ், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு முகாமை துவக்கிவைத்தாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஆதிதிராவிடக் கட்டடங்களை நாங்கள் ஆய்வு மேற்கொண்டதில், பல கட்டடங்கள் மிக மோசமான நிலையில் உள்ளன.
பல இடங்களில் கட்டடங்களுக்கு சுற்றுச்சுவா்களே இல்லை. கட்டடங்களை மேம்படுத்த ரூ.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிட மாணவா்களுக்கு உதவித்தொகை கிடைப்பதில் சிக்கல் இருந்தால், அது குறித்து தெரிவிக்கும் பட்சத்தில் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்