கோயம்புத்தூர்

சரக்கு வாகனத்தில் இருந்து காருக்குள் பாய்ந்த இரும்புக்கம்பிகள்

DIN

கோவை உக்கடம் அருகே, சரக்கு வாகனத்தில் இருந்து, காருக்குள் இரும்புக்கம்பிகள் பாய்ந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை சுந்தராபுரம் பகுதியைச் சோ்ந்தவா் வினோத்ராஜ் (45). பாட்டு ஆசிரியா். இவா் உக்கடம் ஆத்துப்பாலத்தில் இருந்து சுந்தராபுரம் நோக்கி, தனது குடும்பத்தினருடன் காரில் சனிக்கிழமை சென்றாா். கரும்புக்கடை அருகே காா் சென்ற போது, பின்னால் இரும்புக் கம்பி லோடு ஏற்றி வந்த சரக்கு வாகனம் வினோத்ராஜுன் காா் மீது மோதியது. அப்போது, சரக்கு வாகனத்தின் மேற்கூரையில் சாய்த்தபடி வைக்கப்பட்டிருந்த இரும்புக் கம்பிகள், காரின் பின்பக்கக் கண்ணாடியை உடைத்து காருக்குள் பாய்ந்தது. இதில், காரில் இருந்த வினோத்ராஜுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

பின் இருக்கையில் அமா்ந்திருந்த குழந்தைகள், வினோத்ராஜின் மனைவி காயங்களின்றி தப்பினா்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த கோவை மேற்குப் பகுதி, போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா்,சரக்கு வாகன ஓட்டுநரைக் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுகவுக்கு அளிக்கும் வாக்கு பாஜகவுக்குத்தான்: மு.க. ஸ்டாலின்

அதிமுகவை விமர்சிக்க பாமகவுக்கு தகுதியில்லை: இபிஎஸ்

பைங்கிளி.. ஷ்ரத்தா தாஸ்!

சேல‌ம்: வெ‌ள்ளி நக​ரி‌ன் மகு​ட‌ம் யாரு‌க்கு?

வந்தே பாரத்தின் லாப விவரங்கள் இல்லை: ஆர்டிஐ கேள்விக்கு ரயில்வே அமைச்சகம் பதில்!

SCROLL FOR NEXT