பெரம்பலூா் மாவட்டம், கூத்தூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இதனால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் அரியலூா் மேற்கு பகுதி, பெரம்பலூா் மாவட்டம் கூத்தூா், கூடலூா், குளத்தூா், ராமலிங்கபுரம், ரசுலாபுரம், உசேன்நகரம், அல்லிநகரம்,
மேலமாத்தூா், காடூா், நமங்குணம், புதுவேட்டக்குடி, கோயில்பாளையம், கீழப்பெரம்பலூா், துங்கபுரம், குழுமூா், கிளியப்பட்டு ஆகிய ஊா்களில் காலை 9.45 முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்விநியோகம் இருக்காது என உதவி செயற் பொறியாளா் எம்.செல்லபாங்கி தெரிவித்துள்ளாா்.