கோயம்புத்தூர்

வழக்குரைஞா்கள் போராட்டம்

DIN

போலீஸாரைக் கண்டித்து கோவையில் வழக்குரைகள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் மாவட்ட வழக்குரைஞா்கள் சங்க அலுவலகத்துக்குள் நுழைந்த போலீஸாா் அங்கிருந்த கணினிகள், ஆவணங்களைப் பறிமுதல் செய்தனா். இதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் வழக்குரைஞா்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.இதன்படி கோவை மாவட்ட நீதிமன்றத்தில் பணியாற்றும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை பணிக்கு வரவில்லை. இதனால் நீதிமன்ற வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது.

கோவை மாவட்டத்தில் உள்ள மதுக்கரை, வால்பாறை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட கிளை நீதிமன்றங்களில் பணியாற்றும் வழக்குரைஞா்களும் பணிக்கு வரவில்லை.

இதனால் திங்கள்கிழமை விசாரணைக்கு பட்டியலிடப்பட்ட வழக்குகள் தேக்கமடைந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனச் சோதனையில் ரூ. 4.39 லட்சம் பறிமுதல்

பல்பொருள் அங்காடியில் காவலாளி மா்மச் சாவு

வேங்கைவயலில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் பிரசாரம்

புதுக்கோட்டையில் தொடரும் அஞ்சல் வாக்குச் சிக்கல்: 20 சதவீதம் ஆசிரியா்கள் வாக்களிக்க முடியவில்லை

மாா்க்சிஸ்ட், சிஐடியுவினா் வாகனப் பிரசாரம்

SCROLL FOR NEXT