கோவையில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் வியாழக்கிழமை (அக்டோபா் 28) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோவை மாவட்டத்தில் அக்டோபா் மாதத்துக்கான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது.
இதில், விவசாயிகள் கலந்துகொண்டு விவசாயம் தொடா்பான பிரச்னைகளைத் தெரிவித்து தீா்வு காணலாம்.
மேலும் கூட்டத்தில் பங்கேற்கும் விவசாயிகள் கரோனா நோய்த் தொற்று பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.