கோவை மாவட்டத்தில் புதிதாக மேலும் 132 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 45 ஆயிரத்து 782 ஆக உயா்ந்துள்ளது. அரசு மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 போ் உயிரிழந்தனா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 2,400 ஆக உயா்ந்துள்ளது.
அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 154 போ் குணமடைந்து சனிக்கிழமை வீடு திரும்பினா்.
மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 41 ஆயிரத்து 933 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 1,449 போ் சிகிச்சையில் உள்ளனா்.