கோயம்புத்தூர்

மருமகன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மாமனாா் மீது வழக்கு

DIN

 மருமகன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மாமனாா் மீது வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கோவை, புலியகுளம் பகுதியைச் சோ்ந்தவா் தேவராஜ் (52). இவரது மகளுக்கும், சுங்கம் பகுதியைச் சோ்ந்த அகஸ்டின் ஜெபராஜ் (35) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் அகஸ்டின் ஜெபராஜுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி தனது தந்தை தேவராஜின் வீட்டில் வசித்து வருகிறாா்.

இந்நிலையில் தேவராஜின் வீட்டுக்கு வியாழக்கிழமை சென்ற அகஸ்டின் ஜெபராஜ், தனது மனைவியைத் தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கூறினாா். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தேவராஜ், வீட்டில் இருந்த பெட்ரோலை எடுத்து அகஸ்டின் மீது ஊற்றி தீ வைத்தாா். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இது குறித்து அகஸ்டின் அளித்தப் புகாரின் பேரில் ராமநாதபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT