கோவை குமிட்டிபதி அருகே மின்னல் தாக்கி பெண் புதன்கிழமை உயிரிழந்தாா்.
கோவை, மதுக்கரை அரிசிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் முருகேசன் மனைவி லட்சுமி (56). இவா், தனது மகன், மருமகள், பேரன் ஆகியோருடன் குமிட்டிபதியை அடுத்துள்ள முருகன் கோயிலுக்கு சென்றுள்ளாா். சுவாமி வழிபாடு முடிந்து திரும்பியபோது கனமழை பெய்ததால் கோயில் அருகே இருந்த மரத்தின்கீழ் அனைவரும் நின்று கொண்டிருந்ததாகத் தெரிகிறது.
அப்போது பலத்த இடியுடன் மின்னல் தாக்கியதில் லட்சுமி சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தாா்.
இச்சம்பவம் தொடா்பாக மதுக்கரை போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.