கேரளத்தைச் சேர்ந்த இருவரிடம் இரிடியம் மோசடியில் ஈடுபட்ட 6 பேரை போலீஸார் கோவை செட்டிபாளையம் அருகே வைத்து கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து ரூ.99.25 லட்சம் மதிப்புள்ள போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இரிடியம் மோசடியில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்து மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட கவச உடை, ஆக்சிஜன் சிலிண்டர்களை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். தலைமறைவாக உள்ள ஒருவரை தேடி வருகின்றனர்.