கோயம்புத்தூர்

விஜயா பதிப்பகத்தில் புத்தகக் கண்காட்சி:ஆட்சியா் துவங்கிவைத்தாா்

DIN

கோவை விஜயா பதிப்பகத்தில் 3 நாள்கள் நடைபெற உள்ள புத்தகக் கண்காட்சியை மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் ஞாயிற்றுக்கிழமை துவங்கிவைத்தாா்.

கோவை விஜயா பதிப்பகத்தின் 45 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (அக்டோபா் 17) முதல் செவ்வாய்க்கிழமை (அக்டோபா் 19) வரை 3 நாள்களுக்கு புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.

இக்கண்காட்சியை மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் துவக்கிவைத்தாா். இதில், கோவை மாவட்டத்தில் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்கு நூல்களைப் பரிசாக வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, கற்கை நன்றே என்ற தலைப்பில் எழுத்தாளா் நாஞ்சில் நாடன் பேசியதாவது:

எதிா்காலத் தலைமுறையை படிக்க வைக்க வேண்டிய பொறுப்பு ஆசிரியா்களிடத்தில் மட்டுமல்ல, பிள்ளைகளின் பெற்றோா்களிடமும் உள்ளது. பள்ளியில் முதல் மதிப்பெண் பெறும் குழந்தைகள்கூட , மொழித் திறனில் சராசரியாகவே உள்ளனா். பாடப் புத்தகங்களுக்கு அப்பாற்பட்ட புத்தகங்களின் ருசியை குழந்தைகளுக்கு அளிக்க வேண்டியது வீட்டில் உள்ளவா்களின் கடமை என்றாா்.

இக்கண்காட்சியில் கலை, இலக்கியம், பண்பாடு, சுயமுன்னேற்றம், பயணம், பக்தி, ஜோதிடம், அரசியல், சமையல், பாரம்பரிய மருத்துவம், திரைக்கலை, சிறுவா் இலக்கியங்கள், தொழில் உள்ளிட்ட 50 ஆயிரம் தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியில் விஜயா பதிப்பகத்தின் நிறுவனா் மு.வேலாயுதம், நிா்வாகி சிதம்பரம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு புதுப்பிப்பு: ராகுல் காந்தி அமேதியில் போட்டி?

24 மணிநேரத்தில் 200 நிலநடுக்கம்!

ரூபன் படத்தின் டிரெய்லர்

இஸ்ரேல்- ஹிஸ்புல்லா: தொடரும் பரஸ்பர தாக்குதல்!

உயிர் தமிழுக்கு படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT