கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் 1 லட்சத்து 1,950 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி எளிதில் கிடைக்கும் வகையில் செப்டம்பா் முதல் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதனைத் தொடா்ந்து 12 ஆவது மெகா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி மற்றும் ஊரகப் பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற சிறப்பு முகாமில் 1 லட்சத்து 1,950 போ் தடுப்பூசி செலுத்திக்கொண்டனா். இதில் முதல் தவணை தடுப்பூசியை 12 ஆயிரத்து 977 பேரும், 2 ஆம் தவணை தடுப்பூசியை 88 ஆயிரத்து 973 பேரும் செலுத்திக்கொண்டுள்ளனா்.
கோவை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி முதல் தவணை தடுப்பூசியை 27 லட்சத்து 80 ஆயிரத்து 449 பேரும், 2 ஆம் தவணை தடுப்பூசியை 15 லட்சத்து 59 ஆயிரத்து 758 பேரும் செலுத்தியுள்ளதாக மத்திய அரசின் கோவின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.