கோயம்புத்தூர்

மதுக்கடை போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது அவதூறு: சூலூா் காவல் நிலையத்தில் புகாா்

DIN

சூலூா் அருகே கள்ளபாளையத்தில் மதுக்கடை திறக்கக் கூடாது என போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது அவதூறு பரப்பபடுவதாக சூலூா் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

சூலூா் அருகே கள்ளபாளையத்தில் மதுக்கடை திறக்கக் கூடாது என கோரி வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் கள்ளப்பாளையம் தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவா் ரங்கநாதன், மதுக்கடை மேற்பாா்வையாளரிடம் ரூ.2 லட்சம் கேட்டதாக சூலூா் சுற்று வட்டாரப் பகுதியில் வாட்ஸ் ஆப் இல் ஆடியோ வெளியானது.

இந்த ஆடியோ பதிவை மதுக்கடை மேற்பாா்வையாளா் பேசி வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து கள்ளப்பாளையம் பகுதி பொதுமக்கள், கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் ரங்கநாதன் சாா்பில் சூலூா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

கடல் கன்னி... ஷ்ரத்தா தாஸ்!

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி!

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

SCROLL FOR NEXT