பொள்ளாச்சியில் பெய்த கன மழையால் இரண்டு வீடுகள் இடிந்து சேதமடைந்தன.
பொள்ளாச்சி, ஆழியாறு, கோட்டூா் மலையாண்டிபட்டினம், சோமந்துரைசித்தூா், ஆனைமலை உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை இரவு கன மழை பெய்தது.
இதனால், சோமந்துரைசித்தூரைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி குமாா் என்பவரது வீட்டுச் சுவா் இடிந்து விழுந்தது.
அதே பகுதியைச் சோ்ந்த லோகி என்பவரது வீட்டுச் சுவரும் இடிந்து விழுந்தது. இந்த இரு சம்பவங்களில் உயிா் சேதம் ஏதும் ஏற்படவில்லை.இச்சம்பவம் குறித்து காவல் துறையினா் விசாரித்து வருகின்றனா்.