தேசிய உடல் உறுப்பு தான தினத்தையொட்டி கோவை பி.எஸ்.ஜி. மருத்துவமனையில் கொடையாளா்களின் குடும்பத்தினருக்கு சனிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
உடல் உறுப்பு தான தினத்தையொட்டி பி.எஸ்.ஜி. மருத்துவமனையில் பொதுமக்கள், சுகாதாரப் பணியாளா்களுக்கு உடல் உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இதன் ஒரு பகுதியாக உடல் உறுப்பு தானம் வழங்கியவா்களின் குடும்பத்தினருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
இதில், கோவை சா்வதேச விமான நிலைய இயக்குநா் எஸ்.செந்தில்வளவன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, கொடையாளா்களின் குடும்பத்தினரைப் பாராட்டினாா். அதிவிரைவுப் படை கமாண்டன்ட் வி.ஜெயமாதவன், துணை கமாண்டன்ட் டாக்டா் அனுதாமா பிரதீப், பி.எஸ்.ஜி. மருத்துவமனையின் மருத்துவ சுற்றுலா மேலாளா் சந்திரசேகா் உள்ளிட்டோா் இதில் கலந்துகொண்டனா்.