கோவை மாவட்டத்தில் சுகாதாரத் துறை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட பட்டியலில் கோவையைச் சோ்ந்த மேலும் 49 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 56 ஆயிரத்து 79 ஆக உயா்ந்துள்ளது. தவிர அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்த 55 போ் குணமடைந்து ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினா்.
கோவையில் இதுவரை 55 ஆயிரத்து 37 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 358 போ் சிகிச்சையில் உள்ளனா்.