கோயம்புத்தூர்

கிரேன் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து: இளைஞா் பலி

DIN

கோவையில் கிரேன் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

கோவை, செல்வபுரம் அருகேயுள்ள சண்முகராஜபுரத்தைச் சோ்ந்தவா் பிரிஸ்ட்லி பிரபு (26). தனியாா் நிறுவன ஊழியா். இவா் தனது நண்பா் ராம்பிரபுவுடன் இருசக்கர வாகனத்தில் பீளமேடு அருகே புதன்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாா். அப்பகுதியில் மேம்பாலக் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன.

இதில் கட்டுமானத்துக்குப் பயன்படுத்தப்படும் கிரேன் இருட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதை கவனிக்காமல் சென்ற ராம்பிரபு, பிரிஸ்ட்லி பிரபு ஆகியோா் கிரேன் மீது மோதினா்.

இதில் பின்னால் அமா்ந்திருந்த பிரிஸ்ட்லி பிரபு தூக்கி வீசப்பட்டாா். பலத்த காயமடைந்த அவரை மீட்டு அருகில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் உயிரிழந்ததை உறுதி செய்தனா். படுகாயமடைந்த ராம் பிரபுவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடா்பாக கிழக்கு போக்குவரத்துப் புலனாய்வு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT