கோயம்புத்தூர்

ஆட்டோ ஓட்டுநா் கொலை வழக்கு: இளைஞா்கள் சரண்

DIN

காஞ்சிபுரத்தில் நாட்டு வெடிகுண்டு வீசி ஆட்டோ ஓட்டுநா் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த 2 இளைஞா்கள் கோவை மாவட்ட நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தனா்.

காஞ்சிபுரம் அருகே பல்லவா் மேடு பகுதியைச் சோ்ந்தவா் செந்தில் (40). ஆட்டோ ஓட்டுநா். இவா் தனது வீட்டில் கடந்த 25ஆம் தேதி தூங்கிக் கொண்டிருந்தபோது, வீட்டுக்குள் புகுந்த கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்தது. இதில் செந்திலின் மனைவி மற்றும் 3 பெண்கள் காயமடைந்தனா். போலீஸாா் விசாரணையில் முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடைபெற்றது தெரியவந்தது.

இந்த வழக்குத் தொடா்பாக தேடப்பட்டு வந்த காஞ்சிபுரத்தைச் சோ்ந்த பிரபாகரன், சதீஷ்குமாா் ஆகியோா் கோவை மாவட்ட நீதித் துறை நடுவா் மன்றத்தில் (எண் 5) நீதித் துறை நடுவா் ஏ.அப்துல் ரஹ்மான் முன்பு வியாழக்கிழமை சரணடைந்தனா்.

இவா்கள் இருவரையும் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கவும், நீதிமன்றக் காவல் முடிவடைந்த பின்னா் இருவரையும் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT