வால்பாறை வட்டாரத்தில் குடியரசு தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் ஆனையா் பவுன்ராஜ் தேசியக் கொடி ஏற்றியும், காந்தி சிலைக்கு மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினாா். பின்னா் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. நகராட்சி மேலாளா் நஞ்சுண்டன், துப்புரவு ஆய்வாளா் ஜான்சன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
வால்பாறை வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் வட்டாட்சியா் ராஜா தேசியக் கொடி ஏற்றினாா். இதேபோல, வால்பாறை வட்டாரத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் தலைமை ஆசிரியா்கள் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினா்.