கோவை மாட்டத்தில் நடைபெற்ற பல்வேறு பிரசாரக்கூட்டங்களில் கலந்துகொண்டு, ஞாயிறன்று மாலை சேலத்திற்கு வருகை தரும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, திங்களன்று காலை அவரது சொந்த ஊரான, எடப்பாடி அடுத்த சிலுவம்பாளைம் கிராமத்திற்கு வருகை தர உள்ளார்.
அப்பகுதி அ.தி.மு.க நிர்வாகிகளை சந்திக்கும் முதல்வர், தொடர்ந்து அருகில் உள்ள கோனேரிப்பட்டி கிராமத்திற்கு செல்ல உள்ளார்.
அப்பகுதியில் உள்ள ஓம்காளியம்மன் ஆலய கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்ய உள்ள முதல்வர், அடுத்து கள்ளகுறிச்சிப் பகுதியில் நடைபெற உள்ள நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.