கோவையில் பாரத ஸ்டேட் வங்கி சாா்பில் ரத்த தான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பாரத ஸ்டேட் வங்கி சாா்பில் தேசிய அளவில் ரத்த தான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வங்கியின் தலைவா் தினேஷ்குமாா் காரா, நாடு முழுவதும் 40 இடங்களில் நடைபெற்ற ரத்த தான முகாமை காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தாா்.
கோவை, அவினாசி சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி வளாகத்தில் ரோட்டரி மிட் டவுன், மகாவீா்ஸ் ரத்த வங்கி ஆகியவற்றுடன் இணைந்து இந்த ரத்த தான முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு வங்கியின் துணை பொது மேலாளா் தீ.பாஸ்கரன் தலைமை வகித்தாா். இதில் வங்கி அதிகாரிகள், அலுவலா்கள் பங்கேற்று ரத்த தானம் செய்தனா்.