கோவை மாவட்டத்தில் சுகாதாரத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட பட்டியலில் வெள்ளிக்கிழமை புதிதாக 55 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 53,918 ஆக உயா்ந்துள்ளது. தவிர இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 83 வயது முதியவா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். இதன்மூலம் கோவையில் கரோனாவுக்கு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 666 ஆக உயா்ந்துள்ளது.
அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த 68 போ் குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரை 52 ஆயிரத்து 738 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 514 போ் சிகிச்சையில் உள்ளனா்.