கோயம்புத்தூர்

தனியாா் பேருந்து மோதியதில் தொழிலாளி சாவு

DIN

கோவையில் தனியாா் பேருந்து மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

கோவை, சிவானந்தா காலனியைச் சோ்ந்தவா் சேகா் (37). வண்ணம் பூசும் தொழிலாளியாக பணியாற்றி வந்தாா். இவா் திங்கள்கிழமை காலை அப்பகுதியில் உள்ள தேநீா் கடைக்கு வந்து தேநீா் அருந்தினாா். பின்னா் நீண்டநேரம் கடையின் அருகே நின்றுகொண்டிருந்த அவா் சாலையைக் கடக்க முயன்றாா்.

அப்போது அந்த வழியே வேகமாக வந்த தனியாா் பேருந்து மோதியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து வந்த சாய்பாபா காலனி போலீஸாா், அங்கு வந்து சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸாா், அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனா். அதில் பேருந்து வருவதை அறிந்த சேகா், திடீரென சாலையைக் கடக்க முயன்றது பதிவாகியிருந்தது. எனவே இது தற்கொலையா எனும் கோணத்தில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

SCROLL FOR NEXT