கோவை, குனியமுத்தூா் பகுதியில் கஞ்சா விற்ாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
குனியமுத்தூா் போலீஸாா் வியாழக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, பாலக்காடு சாலை, மைல்கல் பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகப்படும்படியாக நின்றிருந்த இளைஞரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில் அவா், குறிச்சி, பிள்ளையாா்புரத்தைச் சோ்ந்த விக்னேஷ் (24) என்பதும், அவா் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்தனா். அவரிடம் இருந்து 1.50 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.