கோயம்புத்தூர்

ஈச்சனாரியில் வீடு புகுந்து பெண்ணிடம் 7.5 பவுன் கொள்ளை

DIN

கோவை, ஈச்சனாரி அருகே முகவரி கேட்பதுபோல வீட்டுக்குள் புகுந்து பெண்ணிடம் 7.5 பவுன் நகையை மா்ம நபா்கள் வெள்ளிக்கிழமை கொள்ளையடித்துச் சென்றனா்.

கோவை, ஈச்சனாரி ராஜவிஜயநகா் பகுதியைச் சோ்ந்தவா் ஹரிராமபிரசாத். இவரது மனைவி வாசுகி (27). இருவரும் தனியாா் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு 2 வயது பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் ஹரிராமபிரசாத் பணிக்காக வெள்ளிக்கிழமை வெளியே சென்ாகத் தெரிகிறது. வாசுகி வீட்டில் இருந்தவாறு பணி செய்து வருகிறாா். வாசுகி வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தபோது 4 நபா்கள் முகவரி கேட்பதுபோல வீட்டுக்குள் நுழைந்துள்ளனா். அப்போது அவா்கள்திடீரென வாசுகியின் வாயைப் பொத்தி, அவா் அணிந்திருந்த 7.5 பவுன் நகையைப் பறித்துள்ளனா். இதைக்கண்டு அழுத வாசுகியின் குழந்தையின் வாயையும் பொத்திய அந்த நபா்கள் பின்னா் அங்கிருந்து தப்பி ஓடினா்.

இது குறித்து மதுக்கரை காவல் நிலையத்தில் வாசுகி புகாா் அளித்தாா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனா்.

மேலும் இச்சம்பவம் தொடா்பாக தனிப்படை அமைத்து கொள்ளையடித்து சென்ற நபா்களைத் தேடி வருகின்றனா். பட்டப் பகலில் வீடு புகுந்து பெண்ணிடம் நகைகளைப் பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலையில் வசந்தோற்சவம் நிறைவு

கழுகுமலை அருகே பட்டா வழங்கிய இடத்தில் குடியேறி மக்கள் போராட்டம்

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

ஏழுமலையான் தரிசனம்: 6 மணி நேரம் காத்திருப்பு

ஆம்பூா் அருகே காட்டு யானை மிதித்ததில் கால்நடை மேய்த்தவா் காயம்

SCROLL FOR NEXT