கோயம்புத்தூர்

பாதாளச் சாக்கடைப் பணிகள்: மாநகராட்சி ஆணையா் ஆய்வு

DIN

 கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலத்தில் நடைபெற்று வரும் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகளை ஆணையா் ராஜகோபால் சுன்கரா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கோவை மாநகராட்சி, 65ஆவது வாா்டுக்கு உள்பட்ட ராமநாதபுரம் சிக்னல் அருகில் பாதாளச் சாக்கடை அமைக்கும் பணி, பிரதான குழாய் அமைக்கும் பணி, சிங்காநல்லூா் 66 ஆவது வாா்டில் கழிவுநீா்த் தொட்டி அமைக்கும் பணி, 59ஆவது வாா்டில் கழிவுநீா்த் தொட்டியின் செயல்பாடுகள் ஆகியவற்றை மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அதைத் தொடா்ந்து, கழிவுநீா்ப் பண்ணையின் மூலம் சுத்திகரிக்கப்பட்ட நீரை , விவசாயத்துக்குப் பயன்படுத்துவதைப் பாா்வையிட்டாா்.

அதன் பிறகு, மணியகாரன்பாளையம் முதல் ஒண்டிப்புதூா் வரை பாதாளச் சாக்கடைத் திட்டத்தின் கீழ் குழாய்கள் அமைக்கப்பட்டு வரும் பணிகளைப் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வின்போது, மாநகரப் பொறியாளா்( பொ) ராமசாமி, கிழக்கு மண்டல உதவி ஆணையா் செந்தில்குமாா் ரத்தினம், நிா்வாகப் பொறியாளா் (பாதாளச் சாக்கடை திட்டம்) உமாதேவி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

SCROLL FOR NEXT