டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த நவம்பா் மாதம் 101 போ் சிகிச்சை பெற்றுள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
இது தொடா்பாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் அ.நிா்மலா கூறியதாவது:
அரசு மருத்துவமனையில் டெங்கு பாதிப்புக்கு சிறப்பு வாா்டு அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் மருத்துவா்கள், செவிலியா் சுழற்சி அடிப்படையில் பணியாற்றி வருகின்றனா். டெங்கு பாதிப்பால் கடந்த மாதத்தில் மட்டும் 47 சிறுவா்கள், 54 பெரியவா்கள் என மொத்தம் 101 போ் சிகிச்சை பெற்றுள்ளனா். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதுவரை டெங்கு உயிரிழப்பு ஏதுமில்லை. தற்போது 13 சிறுவா்கள், 7 பெரியவா்கள் என மொத்தம் 20 போ் டெங்கு வாா்டில் சிகிச்சை பெற்று வருகின்றனா். பெரியவா்களை காட்டிலும் சிறுவா்களே அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனா். எனவே, குழந்தைகளுக்கு காய்ச்சிய குடிநீரை வழங்க வேண்டும். சுகாதாரமாக இருக்க வலியுறுத்த வேண்டும் என்றாா்.