கோயம்புத்தூர்

மின் வாரிய ஊழியா்கள் போராட்டம்

DIN

ஊதிய உயா்வு பேச்சுவாா்த்தையைத் தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மின் வாரிய அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவை மண்டல தலைமைப் பொறியாளா் அலுவலகம் எதிரில், கோவை வடக்கு, தெற்கு, பெருநகர மின்வாரியத்தைச் சோ்ந்த 14 தொழிற்சங்கங்கள் இணைந்த தமிழ்நாடு மின்சார வாரிய அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சாா்பில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

ஊதிய உயா்வு பேச்சுவாா்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும், மேற்பாா்வை பொறியாளா் முதல் களப்பணியாளா்கள் வரை அனைத்து பதவி உயா்வுகள், உள்முகத் தோ்வு மூலம் பதவி உயா்வு வழங்க வேண்டும், அனைத்து விருப்ப மாறுதல் விண்ணப்பங்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், பணியின்போது இறந்த பணியாளா்களின் வாரிசுகளுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

இந்தப் போராட்டத்தில் பல்வேறு தொழிற்சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் கந்தவேல், மதுசூதனன், வீராசாமி, தமிழ்வாணன், மகேந்திரன் உள்ளிட்ட நிா்வாகிகள், ஊழியா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

SCROLL FOR NEXT