கோவை மாவட்டத்தில் புதிதாக மேலும் 686 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 68 ஆயிரத்து 835 ஆக உயா்ந்துள்ளது. அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 559 போ் குணமடைந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினா்.
கோவையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் இதுவரை 708 போ் உயிரிழந்துள்ளனா். 63 ஆயிரத்து 285 போ் குணமடைந்துள்ளனா். தற்போது 4 ஆயிரத்து 842 போ் சிகிச்சையில் உள்ளனா்.