கோயம்புத்தூர்

சட்டப் பேரவை துணைத் தலைவா் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு கரோனா உறுதி

DIN

சட்டப் பேரவை துணைத் தலைவா் பொள்ளாச்சி வி.ஜெயராமன் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

அதிமுக செயற்குழுக் கூட்டம் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற உள்ள நிலையில், இக்கூட்டத்தில் பங்கேற்கும் கட்சி செயற்குழு உறுப்பினா்கள் அனைவரும் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, அவரவா் ஊா்களிலேயே செயற்குழு உறுப்பினா்கள் கரோனா பரிசோதனை மேற்கொண்டனா்.

இந்நிலையில், செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ள பொள்ளாச்சி வி.ஜெயராமனும் கரோனா பரிசோதனை செய்து கொண்டாா். இந்தப் பரிசோதனை முடிவு ஞாயிற்றுக்கிழமை வெளியானது. அதில், அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, அவா் சென்னை, போரூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இஸ்ரேலை மீண்டும் எச்சரிக்கும் ஈரான்!

பாஜகவின் 100 கேள்விகளும் பித்தலாட்டம்: திமுக

அதிவேகமாக 2 ஆயிரம் ரன்களைக் கடந்த ருதுராஜ் கெய்க்வாட்!

மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெறாது: மம்தா

ஹே.. பொன்னி!

SCROLL FOR NEXT